மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களுகான ஆக்கத்திறன் போட்டி நேற்றைய தினம் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் சர்மிளாவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் சிவானந்தராஜா, இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மண்முனை மேற்கு செயலாளர் பிரிவில் பதிவு செய்ப்பட்ட 14 அறநெறிப் பாடசாலையில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேச்சு,பாடல்,வில்லுப்பாட்டு,நடனம்,பஜனை,ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் இடம் பெற்றது.