மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து பயணித்த படகு விபத்தில் சிக்கியது: ஒருவர் உயிரிழப்பு

0
88

மட்டக்களப்பு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, அம்பாறை கல்முனையைச் சேர்ந்த 5 மீனவர்கள், கடந்த 12ஆம் திகதி இயந்திரப் படகு மூலம் மீன் பிடிக்கச் சென்றபோது, படகு விபத்தில் சிக்கியது.

விபத்தில் நிந்தவூரைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முகம்மது அலியார் இப்ராலெப்பை என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம், வாழைச்சேனை கடற்படையினரால் மீட்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்றாய்வின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.