சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் இன்று காலை முதல் மருத்துநீர் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்,
பிரதமகுரு சிவஸ்ரீ சுதாகர குருக்களின் ஆசியுடன் ஆலய வண்ணக்குமார்களினால் மருத்துநீர் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து மருத்துநீர் பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிந்தது.
இன்று மாலை முதல்; புதுவருடபிறப்பு சிறப்பு வழிபாடுகள் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ளன.