2022ம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மண்டபத்தில், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில், இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் கலந்துகொண்டார்.
வெட்டுப் புள்ளிகளுக்கு மேல்பெற்றக்கொண்ட மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்வி பணிப்பாளர்கள், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர்கள் ,ஆசிரியர்
ஆலோசகர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.