மட்டு.காத்தான்குடி கடற்கரையில்
கடலரிப்பை தடுக்க நடவடிக்கை

0
205

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி கடற்கரையின், கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள்,மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரையோரம் பேணல் திணைக்களம், காத்தான்குடி பிரதேச செயலகம், காத்தான்குடி நகர சபை என்பன இணைந்து, குறித்த கடல் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள் காத்தான்குடி கடற்கரையிற்கு சென்று மண் மூடைகளை கட்டி கரையோரம் இட்டு அங்குள்ள கட்டங்களை பாதுகாக்க நடவடிக்கையில் இன்று ஈடுபட்டனர்;.

கடந்த ஒருவாரத்துக்;கும் மேலாக கடலரிப்பு ஏற்பட்டு வருவதுடன் காத்தான்குடி கடற்கரையின் ஏத்துக்கால் பகுதியிலேயே கடலரிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.இப்பகுதியிலுள்ள மீன்பிடி படகுககள் கரையை அன்மித்த வீதியின் ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி கடற்கரையில் கடலரிப்புக் காரணமாக அப்பகுதி மீனவர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் கட்டங்கள், மரங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதுடன் மீன்பிடி படகுகளை கடலுக்கு கொண்டு செல்;வதிலும் மீனவர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.