கிழக்கில் சுகாதார உட்கட்டமைப்பின் மேம்பாட்டுக்கு இந்தியாவின் உந்துசக்தி நன்கொடை உதவித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இரண்டு மாடிகளைக்கொண்ட சத்திசிகிச்சை நிலையத்தினை இந்திய தூதுவுர் கோபால் பக்லே சென்று பார்வையிட்டாhர்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற இந்திய தூதுவர் கோபால் பக்லேவை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் க.கலாரஞ்சனி, சத்திசிகிச்சை நிபுணர் டொக்டர் சீப்றா,வைத்திய நிபுணர் மதனழகன் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து இந்திய அரசாங்கத்தின் 263மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளுடனும் அமைக்கப்படும் சத்திசிகிச்சை நிலைய விடுதியையும் இந்திய தூதுவர் பார்வையிட்டார்.இவ்விஜயத்தின்போது குறித்த நிலையத்தினை பூர்த்திசெய்வதற்குரிய தேவைப்பாடுகள் குறித்து தூதுவர் அறிந்துகொண்டதுடன் குறித்த விடுதியை பூர்த்திசெய்து மக்களின் பாவனைக்கு கையளிக்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்தவும் அதற்கான உதவிகளை இந்தியா வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.