மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சூரியசக்தி மின்உற்பத்தி மூலம் மின்சாரத்தினைப் பெறும் வகையிலான சூரிய மின்சக்தி கலங்களை பொருத்தும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
உலக வங்கியின் சுமார் 80இலட்சம் ரூபா நிதியுதவியுடன் இந்த
சூரியமின்சக்தி கலங்கள் பொரும் பணிகள் மட்டக்களப்பு பொதுச்சந்தையில் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்களான சிவம்பாக்கிநாதன், சசிகலா விஜயதேவா,
ஜெயச்சந்திரன், து.மதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருமானம் ஈட்டும் வகையில் சூரிய சக்தி மின்உற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்
இவ்வாறான முதலீட்டு திட்டங்களை அமுல்படுத்தும்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்களும் பங்காளிகளாக மாறலாம் எனவும் மாநகர முதல்வர் இதன் போது தெரிவித்தார்.