அம்பாறை திருக்கோவில் மாணவன் பாடசாலை மரதன் ஓட்டப் போட்டியின் போது உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
திருக்கோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 16 வயதான மாணவன் திடீர் நோய் நிலைமை காரணமாக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.
மாணவனின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.