லிட்ரோ எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்த 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று இன்று காலை துறைமுகத்தை அண்மித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆய்வுப் பணிகள் நிறைவடைந்தவுடன், எரிவாயுவை தரையிறக்கம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மேலும் பல எரிவாயு கப்பல்கள் இலங்கையை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.