பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை வழங்க மறுக்கும் நிறுவனங்களிடமிருந்து பெருந்தோட்டங்கள் பெறப்பட்டு வேறு நிறுவனங்களிடம் தோட்டங்கள் ஒப்படைக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதால், பெருந்தோட்ட நிறுவனத்தினர் கூறுவதை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் பயத்தை ஏற்படுத்துவதாகவும் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கல்; மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்ருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று கொட்கலையில் நடைபெற்ற அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 60வது ஜனனதின நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.
