மலையக மக்கள், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து, 200 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, நாம்-200 வேலைத் திட்டத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள, ‘இளைஞர்களின் எழுச்சி’ எனும் தொனிப்பொருளிலான இளைஞர் மாநாடு, இன்று, கண்டியில் உள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில், பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்புடன், தொண்டர் அமைப்பின் ஒத்துழைப்புடன், மாநாடு நடத்தப்பட்டது.

இதில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் விசேட விருந்தினராக பங்கேற்றார்.
அத்துடன், அமைச்சின் செயலாளர் முகமது நபீல், இலங்கையின் தொழில்முறை மோட்டார் பந்தய பிரபல வீரர் டிலந்த மாலகமுவ, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன பீடாதிபதி மாதவ ஹேரத், இலங்கை பிஸ்கட்டி நிறுவன முதன்மை இயக்குனர் சமித்த பெரேரா மற்றும், அமைச்சின் உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் பங்கேற்றனர்.
