மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில், 8 ஆயிரத்து 139 ஆசிரியர் வெற்றிடம் நிலவுவதாக, கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்போது நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள், 3 ஆண்டுகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.அத்துடன், எதிர்காலத்தில் ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.இருப்பினும், தேசிய பாடசாலைகளுக்கு, 2 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
