30 C
Colombo
Sunday, September 24, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

முச்சக்கர வண்டி சாரதிக்கு பழச்சாறு பானம் கொடுத்து நகை, பணம் திருட்டு!

பழச்சாறு பானம் கொடுத்து முச்சக்கர வண்டி சாரதியை மயக்கமடையச் செய்து நகை, பணம் என்பனவற்றை இளம் ஜோடி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று மீரிகமவில் பதிவாகியுள்ளது.

மீரிகம கல்எலிய பகுதியில் வாடகை முச்சக்கர வண்டியில் ஏறிய இளம் ஜோடி உறவினர் வீட்டுக்கு செல்லவேண்டும் என சாரதியிடம் சொல்லியுள்ளனர்.

பயணத்தை ஆரம்பித்து சிறிது தூரத்தில் மேலும் ஒருவரை வண்டியில் ஏற்றுக்கொண்டனர். பின்னர் வண்டியை கடை ஒன்றின் முன் நிறுத்துமாறு கூறிவிட்டு கடைக்கு சென்று கேக்கும் 2 பழச்சாறு பானங்களையும் வாங்கி வந்தனர். இதில் ஒரு பானத்தை எனக்கு கொடுத்தனர். அதன் பின்னர் சிறிது தூரம் பயணித்ததும் வாகனத்தை நிறுத்த சொன்னார்கள். ஆனால், அதன் பின்னர் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது என கூறுகிறார் பாதிக்கப்பட்ட சாரதி.

விடியற் காலையில் தான் நான் விழித்துக் கொண்டேன். அதற்கு பிறகு நீண்ட தூரம் தவழ்ந்து போனேன். ஒரு வீட்டை அடைந்தேன். அவர்கள் எனக்கு உதவினார்கள். எனது வீட்டாருக்கு தகவல் கொடுத்தார்கள்.

நிச்சயதார்த்த மோதிரம், சங்கிலி, பென்டன் ஆகிய தங்க நகைகளும் பணம் மற்றும் கடிகாரம் என்பனவற்றை குறித்த குழுவினர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக சாரதி மேலும் தெரிவித்துள்ளார்.

சாரதி முச்சக்கர வண்டியுடன் பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை அணி 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்த...

எபிரஸ் பேர்க்ஸ்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவு திறைசேரிக்கு வழங்கிவைப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பற்றியதால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவாக 8,90,000 அமெரிக்க டொலர் திரைசேறிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

யாரையும் தாக்கி காயப்படுத்த வேண்டாம் – பொலிஸில் முறையிடுங்கள்

பல்பொருள் அங்காடிகளிலோ அல்லது வேறு கடைகளிலோ பொருட்களைத் திருடும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது அவர்களைப் பற்றி அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவித்து அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை அணி 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்த...

எபிரஸ் பேர்க்ஸ்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவு திறைசேரிக்கு வழங்கிவைப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பற்றியதால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவாக 8,90,000 அமெரிக்க டொலர் திரைசேறிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

யாரையும் தாக்கி காயப்படுத்த வேண்டாம் – பொலிஸில் முறையிடுங்கள்

பல்பொருள் அங்காடிகளிலோ அல்லது வேறு கடைகளிலோ பொருட்களைத் திருடும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது அவர்களைப் பற்றி அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவித்து அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ்...

மீண்டும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் குறித்து ஒரு பார்வை

கடந்த வருடம் மக்கள் கிளர்ச்சியின்போது தவறான ஆட்சிமுறைக்கு எதிராக எழுந்த முழக்கங்கள் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிரானவையே. கிளர்ச்சி அடக்கி யொடுக்கப்பட்டாலும் அந்த ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் தணிந்துபோய்விட்டதாக கூறமுடியாது.

மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம் 10 நாளாக இன்றும் தொடர்ந்தது..

மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள், மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கக் கோரி முன்னெடுத்து வரும் போராட்டம் 10 வது நாளை எட்டியுள்ளது.