ஆனல்ட் தலைமையில்யாழ் மாநகர நவராத்திரி விழா
யாழ் மாநகர சபையின் நவராத்திரி விழா யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் .நேற்று மாலைமாநகர கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2020/10/FB_IMG_1603718305257-1.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2020/10/FB_IMG_1603718292835.jpg)
யாழ் மாநகர சபையின் சமய விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் வருடாந்த நவராத்திரி விழாவானது கொவிட் – 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிகளுடன், குறுகிய பங்குபற்றுனர்களுடன் இடம்பெற்றது.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2020/10/FB_IMG_1603718308379.jpg)
இந் நிகழ்வில் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர சமய விவகாரக் குழு உறுப்பினர்கள், யாழ் மாநகர ஆணையாளர், செயலாளர், மாநகர பொறியியலாளர்கள், பிரதம கணக்காளர், கணக்காளர், திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2020/10/FB_IMG_1603718305257.jpg)