26 C
Colombo
Saturday, April 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கும் நிவாரணப்பொதி – அமைச்சர் டக்ளஸ்

கொரோனா தொற்றுப் பரவல் அச்சத்தால் யாழ்.மாவட்டத்தில் சுயதனிமைப்படுத்தலில் உள்ள 772 குடும்பத்தைச் சேர்ந்த 1,700 பேருக்கு அரசால் வழங்கப்படும் 5,000 ரூபா பெறுமதியான நிவாரணப்பொதியை உடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
சுயதனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் நிலையில், யாழ். மாவட்டத்துக்கான இடர்கால நிவாரண பொதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என தெரியப்படுத்தப்பட்டது.


இது தொடர்பில் பாராளுமன்ற அமர்வின் பின்னர் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு சென்று பேசியதன் பயனாக அந்தந்த கிராம உத்தியோகத்தர்கள் மூலம் தனிமைப்படுத்தலிலுள்ள அனைவருக்கும் முதற்கட்டமாக நிவாரணப் பொதிகளை வழங்க சகல அரச அதிபர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.


எனவே, தென்பகுதி மக்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் வடபகுதி மக்களுக்கு கிடைக்காமல் அரசு பாரபட்சம் காட்டுவதாகச் சிலர் பேசுவதில் எந்த உண்மையும் இல்லை. எனவே இது தொடர்பில் மக்கள் குழப்பம் அடைய வேண்டிய தேவையும் இல்லை எனத் தெரிவித்தார்.

Related Articles

சந்தையில் மாபிள்களின் விலைகள் குறைப்பு!

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின்...

சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கூட்டம்

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள்...

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சந்தையில் மாபிள்களின் விலைகள் குறைப்பு!

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின்...

சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கூட்டம்

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள்...

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82 ஆவது வயதில் இன்று (01) காலை காலமானார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் ; ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை...