யாழ் வசந்தபுர மக்கள் சுமந்திரனுக்கு பாராட்டு

0
219

வசந்தபுரம் கிராம மக்கள் தமது அடிப்படை சுகாதாரத் தேவையை பூர்த்தி செய்ய முயற்சி எடுத்து உதவிய எம். ஏ. சுமந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

10 மலசல கூடங்களை அமைப்பதாக ஆரம்பித்த முயற்சி இறுதியில் முழுக் கிராத்துக்குமான 50 மலசல கூடங்களை அமைக்கும் திட்டமாக மாறி நிறைவுற்றிருப்பதாக தெரிவித்த அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக தமது பகுதி அபிவிருத்திக்கு பாராளுமன்ற உறுப்பினர் உதவி கரம் நீட்ட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்கள்

நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு, சொற்பளவான கிராம மக்களது பங்கேற்றலுடன் நடைபெற்றது.