27 C
Colombo
Tuesday, October 3, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரிஷாட் பதியுதீன் சரணடைய வேண்டும்!- இராஜாங்க அமைச்சர்

ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியா – டயகமவில் இன்று (17) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறிய பின்னர் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் என சிலர் கூறுகின்றனர், உண்மை அதுவல்ல, நாட்டில் இதற்கு முன்னர் ஜனாதிபதி பதவியை வகித்தவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக்காட்டிலும், குறைந்தளவான அதிகாரங்களே ´20´ ஊடாக ஜனாதிபதிக்கு கிடைக்கும். உயர்நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் வெளியான பின்னர் இது தெரியவரும்.

நாட்டுக்கு சேவையாற்றுவதற்காகவே ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் அமோக ஆணையை வழங்கினர், அவ்வாறு சேவையாற்றுவதற்கு ´19´ தடையாக உள்ளது. அது நீக்கப்படும் என்ற உறுதிமொழியை மக்களுக்கு வழங்கியிருந்தோம். இதற்கு மக்களும் வாக்குரிமைமூலம் அனுமதி வழங்கினர். எனவே, கட்டாயம் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படவேண்டும்.

ரிஷாட் பதியுதீன் விவகாரம் தொடர்பான விசாரணை பொறிமுறைமீது எமக்கும் பலத்த சந்தேகம் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் அறிக்கை கையளித்துள்ளோம். நீதி கிடைக்கும் என நம்புகின்றோம்.

நீதித்துறையில் நாம் தலையிடவில்லை. எவருடனும் அரசியல் டீலும் இல்லை. நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளன.

அதேவேளை, ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும் என்பதே எமது கோரிக்கையும். ரவூப் ஹக்கீமும் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். எனவே, தலைமறைவாகாமல் சரணடையுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

Related Articles

சீரற்ற வானிலை காரணமாக 25863 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்த...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே இருபத்தாறு...

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடர்கிறது

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சீரற்ற வானிலை காரணமாக 25863 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்த...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே இருபத்தாறு...

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடர்கிறது

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

யாழில், நாளை மனித சங்கிலி ஆர்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள மனித சங்கிலி ஆர்பாட்டம் வெற்றி அளிப்பதற்கு, தமிழ் மக்கள் தங்கள்...

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.அதன்படி இன்று கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் '22 கெரட்' தங்கத்தின் விலை 153,000 ரூபாவாக குறைந்துள்ளது.இது,...