வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

0
165

ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 ஆவது கூட்டத்தொடரில், அதன் இறுதித் தீர்மான அறிக்கையில் வடக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்னைகள் மற்றும் அபிலாசைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மனு கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் செயலாளருக்கு பெயரிடப்பட்டு, ஐக்கிய நாடுகளின் யாழ்ப்பாண பிரதிநிதியிடம் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளர் அஷ் ஷெய்க் பி.ஏ.எஸ்.சுபியான் மற்றும் அமைப்பாளர் ஏ.சி.எம்.கலீல் ஆகியோர் இந்த மனுவை கையளித்தனர்.
அதில், முஸ்லிம்கள் வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து இன்று வரை சரியான தீர்வுகள் மற்றும் மறுவாழ்வு இன்றி அவதியுற்று வருவது கவலைக்குரியது. மறக்கப்பட்ட சமூகமாக இருக்கும் வடக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்னைகளைத் தீர்க்க கூட்டத்தொடரில் கவனம் செலுத்தி, இறுதி அறிக்கையில் உள்வாங்கி, சர்வதேசத்தின் கவனத்தை தமது பக்கமும் திருப்ப வேண்டும் என கோரப்பட்டுள்ளது.