வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!

0
43

ஜா – எல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெலிகம்பிட்டிய பகுதியில் 18 இலட்சத்திற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா – எல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொபேகனே பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடையவர்களாவர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  ஜா – எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.