மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுணதீவு பிரதேசத்தில், போதைப்பொருள்
தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை இடம்பெற்றது
கிழக்கு மாகாண புனர்வாழ்வு நிலையமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ‘போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம்’ எனும் தொனிப்பொருளில்,
விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டன.
கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரி கேணல் லால் கமகெதர தலைமையில், துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் இணைப்பாளர் தினேஸ், மாவட்ட செயலக போதைப்பொருள்
தடுப்பு உத்தியோகத்தர் ஜெகன், மண்முனை மேற்கு பிரதேச செயலக போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் நித்தியானந்தன் உள்ளிட்டவர்கள்
விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.