23 C
Colombo
Saturday, March 25, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

வவுனியாவில் 78 பயிலுநர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு

சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கு
தொழில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 78 பயிலுநர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது..

அரசினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் முயற்சியின் அடிப்படையில் அதிமேதகு ஜனாதிபதி மேன்மைதாங்கிய கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் கீழ் வவுனியா மாவட்டத்தில் நேர்முக பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற 69 இளைஞர் யுவதிகளுக்கும், அதேபோன்று வெளியோயா பகுதியைச் சேர்ந்த 18 இளைஞர், யுவதிகளுக்கும் மொத்தமாக 78 பயிலுநர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ( வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் பிரதான காரியாலயத்தில் வைத்து கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

சமூக இடைவெளிகள் கவனத்தில் கொள்ளப்பட்டு சுகாதார வழிமுறைகளின் அடிப்படையில் இடம்பெற்ற குறித்த பயிலுநர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் சர்வமத தலைவர்கள் மற்றும் வவுனியா நகரசபை பிரதித் தவிசாளர் திரு.குமாரசாமி,வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரதி தவிசாளர் திரு.மஹேந்திரன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பயிலுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள்

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய...

சிலாபத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் - இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக...