விபத்துக்களில் சிக்கி இளைஞர்கள் உள்ளிட்ட நால்வர் பலி

0
107

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இளைஞர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதுக்காவில் இருந்து இங்கிரிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் இடதுபுறத்தில் உள்ள சமிக்ஞை கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும், பின்னால் பயணித்தவரும் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னால் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் இங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதேவேளை, நாவுல பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 27 வயதுடைய இளைஞரும், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் 49 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

மேலும், அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் பாதசாரி பெண் ஒருவர், காரில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 69 வயதுடைய பரவகும்புக பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.