28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெலிக்கடை சிறைச்சாலையில் சஹ்ரான் மனைவிக்கு கொரோனா

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கிய பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதிர் பாத்திமா ஹாதியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 23 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.அவர்களில் 22 பேர் பெண்கள் எனவும் சஹ்ரான் ஹாசிமின் மனைவியும் அவர்களுள் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது.

அவர் உள்ளிட்ட தொற்றாளர்கள் சிகிச்சைக்காக வெலிகந்தை கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles