களுத்துறைஇ வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குப் பின்புறத்தில் உள்ள கடற்கரை பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 70 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுவதாக வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கபில நிற சட்டையை அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.