அங்கொடையில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து!!

0
5

கொழும்பு, அங்கொடை , கல்வான சந்தியில் உள்ள சவர்க்காரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.