அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும்?

0
112
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் பலன்கள் அடுத்த மாதம் முதல் மக்களுக்கு வழங்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த சில மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்படியாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.அதன்படி, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை போதுமான அளவில் வழங்குவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.