அநுராதபுரத்தில் சட்டவிரோதமாகப் புதையல் தோண்டிய ஐவர் கைது

0
100

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஜேபுர பகுதியில் சட்டவிரோதமாகப் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று (31) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாந்தோட்டை, திக்வெல்ல மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23, 33, 40, 46 மற்றும் 50 வயதுடைய ஐவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.