27 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறை சம்மாந்துறை பகுதியில், துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் பதிவு

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் நேற்றிரவு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடே துப்பாக்கி சூட்டில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பக்கீர் முகையதீன் றோஜான் என்பவரே உயிரிழந்தவராவார். ரிப்பிட்டர் ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சகோதரர்களிற்கிடையில் ஏற்பட்ட முன் விரோதமே இந்த சம்பவத்திற்கு காரணமென சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் சகோதரனான, சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யயப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles