அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது.

0
111

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எல்.எம்.அதாஉல்லா, டபிள்யூ. வீரசிங்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்
தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம்.முஷாரப், விமலவீர திஸாநாயக்க, திலக் ராஜபக்ஸ, மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்,
மாவட்டத்திலுள்ள திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் என பலரும்
கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தின் நகர அபிவிருத்தி, சுற்றுலாத்துறை மேம்படுத்தல், குடி நீர் சம்பந்தமான பிரச்சினைகள், முக்கிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள்
தொடர்பில் ஆராயப்பட்டன.
ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீPலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருக்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.