சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான, ஆரம்ப கட்ட கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை, நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார துறையின் முதலாம் நிலை செயலாளரின் தலைமையில், நிபுணர்கள் குழுவினர், சந்திப்பை மேற்கொண்டனர்.
வடக்கு மாகாண மக்களின் தற்போதைய வாழ்வியல் செயற்பாடுகள், பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு வசதிகள், சமுத்திர பாதுகாப்பு, கடற்றொழில் செயற்பாடுகள், கண்ணிவெடி அகற்றல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர், ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டனர்.