மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீP சித்தி விக்னேஸ்வர தேவஸ்தான வருடாந்த
மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் அடியார்கள் புடை சூழ பக்தி பூர்வமாக நடைபெற்றது .
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேச திவி சாந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரிகள் இணைந்து கிரியைகளை முன்னெடுத்தனர்.
விநாயர் வழிபாடு, உற்சவகால கிரியைகைகள், விசேட யாக பூசை, அபிசேக பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி வீதி உலா வந்து
மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த குளத்தில் அடியார்கள் புடை சூழ வேத ,நாத, மேளம் முழங்க அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன்
தீர்த்தோற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது