தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பெருமளவிலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் குணவர்தனஇ கடந்த வருடம் இலங்கை திவால் நாடாக அறிவித்ததை அடுத்து அனைத்து வெளிநாட்டு நிதியுதவிகளும் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இதனால் பல்வேறு துறைகளில் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றார். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். சர்வதேச நாணய சபையுடனான கலந்துரையாடல்களும் வெற்றியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக எதிர்க்கட்சியின் சந்தேகம் இருந்தபோதிலும்இ அரசாங்கம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. உள்நாட்டு கடனை மேம்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளதுடன்இ விரிவான கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
செப்டெம்பர் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் இலங்கையை திவால்நிலையிலிருந்து விடுவித்து பாரிய நித்திய நிதியளிப்புக்கான கதவுகளைத் திறக்கும் உடன்படிக்கைக்கு வரமுடியும் என அவர்கள் நம்புவதாக அவர் கூறினார். பலதரப்பு நிறுவனங்களின் வரவு செலவுத் திட்ட ஆதரவுடன் வெளிப்புற நிதியுதவி வரத் தொடங்கியதும்இ இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படும் என்றார்.