இந்தியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

0
109

இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தின் திந்தூரி மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிராமவாசிகள் சிலர் தங்களுடைய தேவரி கிராமத்துக்கு வாகனம் ஒன்றில் திரும்பி கொண்டிருந்தபோது, வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், 21 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்து, சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் அரசு அதிகாரிகள், காயமடைந்த நபர்களை மீட்டு சமூக சுகாதார மையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.