”இந்த ஆண்டு தேர்தல்கள் இல்லை ; அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்”

0
116

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தேர்தல் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘இந்த ஆண்டு தேர்தல்கள் இல்லை. 2024 ஆம் ஆண்டுதான் தேர்தல் . 2024 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாக இருக்கும். அதற்காகத்தான் நாங்கள் தயாராகி வருகிறோம். ரணில் விக்கிரமசிங்கவை தேர்தல் நடத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். பொதுவாக உலகில் ஒரு நாடு வீழ்ந்தால் எதிர்கட்சி தலைவர் பதவி ஏற்பார் ஆனால் இலங்கையில் இ பொறுப்பேற்க முதுகெலும்புள்ள எதிர்கட்சித் தலைவர் இல்லை என்றும் அவர் தெரிவித்தார் .