ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அரசு அறிவித்துள்ளது.
அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உட்பட 9 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.
முன்னதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி இலங்கைக்கு வந்து உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.