இம்முறை கச்சதீவு அந்தோனியார் உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கான உணவு வழங்கலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்
இன்று இடம்பெற்ற முன்னேற்பாட்டுக் கூட்டத்தில் மேற்படி தெரிவித்தார்
இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தில் 8000 பக்தர்கள் பங்கேற்கவுள்ள நிலையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நெடுந்தீவு பிரதேச செயலகத்தால் இம்முறை சைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அதேபோல23 ம் திகதி இரவுணவாக குளைசாதமும் 24ம் திகதி காலை உணவாக சர்க்கரைப் பொங்கலும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
யாழ் மாவட்ட ஆயர் இல்லம், மாவட்ட செயலகம் கடற்படையினரால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இவ்வருட உற்சவத்தினை செலவுகளை குறைத்து நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதேபோல ஆலய வளாகத்தில் சமைப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படாது எனவே இந்த விடயத்தினை ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கருத்தில் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்,