28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இரு பேருந்துகள் மோதி கோர விபத்து!

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்தும் ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் 23 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் ஆண்கள் மூவர் அடங்குவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின், பின்புறம் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பில் ஆடைத் தொழிற்சாலை பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles