இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு மார்ச்சில் உயர்வு !

0
67
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் 9.5 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி நேற்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
.கடந்த பெப்ரவரி மாதம் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.52 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.அந்த தொகை கடந்த மார்ச் மாதம் 4.95 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.அத்துடன் வெளிநாட்டு கடன்கள் மற்றும் வட்டி என்பவற்றுக்காக கடந்த பெப்ரவரி மாதம் வரையில் 1,909.7 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.