கடன் மறுசீரமைப்பு தொடர்பில், இலங்கைக்கும் இலங்கையின் கடனாளிகளுக்கும் இடையில், கலந்துரையாடல்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் கருத்து வெளியிட்டுள்ளார்.
கடன் குறையுமா?,
கடனை செலுத்த கொடுக்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்படுமா?
அல்லது வட்டி குறைக்கப்படுமா?
இது தொடர்பில், இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இலங்கையில், 2023 முதல் 2027 க்கு இடையில், 24 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவெளி காணப்படுகின்றது.
அதில், சுமார் 17 பில்லியன் டொலர்கள், பெறப்படவுள்ள கடன் நிவாரணத்தின் மூலம் ஈடுசெய்யப்படும்.
எஞ்சிய 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை, வெளிநாட்டு நிதி உதவியின் மூலம் ஈடு செய்ய வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.