இலங்கையில் மிகவும் ஆபத்தான கொவிட் வைரஸ் தொற்று பரவல்!

0
187

இலங்கையில் தற்போது பி ஏ .4 மற்றும் பி ஏ.5 என்ற ஆபத்தான கொவிட் வைரஸ் தொற்றுக்கள் வேகமாக பரவி வருவதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொவிட் வைரஸ் தொடர்பான வைத்திய ஆலோசகர் வைத்தியர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது பரவிவரும் பி ஏ .4 மற்றும் பி ஏ .5 கோவிட் வைரஸ் தொற்றுக்கள் மிகவும் ஆபத்தானவை.
இந்த வைரஸ் தொற்றாளர்களின் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் வைரஸ்களில் மிகவும் வேகமாக பரவும் வைரஸாகும்.
எனவே அனைவரும் கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வது ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான செயற்பாடாகும்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் வைரஸ் பரவ ஆரம்பிக்குமாயின் மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் என வைத்தியர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.