இலங்கையில் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் விமானப்படையினரால் முன்னெடுப்பு!

0
108

ஆண்டில் பசுமை விரிவாக்கத்தை 27 வீதம் முதல் 32 வீதமாக உயர்த்துவதன் மூலம் நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக விசேட வேலைத்திடமொன்று விமானப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் வழிகாட்டல் மற்றும் தலைமையின்கீழ், இலங்கை விமானப்படையினரினால் கடந்த அக்டோபர் 29ஆம் திகதி சியாம்பலா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வத்தேகம கபிலித்த வனப்பிரதேசத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. வீரவெல இலங்கை விமானப்படை தளத்தை மையமாக கொண்டு இலக்கம் 04 ஹெலிகொப்டர் படைப்பிரிவிற்கு உரித்தான பெல் 212 ரக ஹெலிகாப்டர் மூலம் 20 தடவைகள் இந்த விதைவீச்சு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கூலன், வேம்பு, அத்தி, நாகை, புளி, பருத்தி, பாலை, வீரை, மருது, கித்துள் உட்பட ஒரு இலட்சம் விதைகள் வான் வழிமூலம் வீசப்பட்டன. இலங்கை வன பாதுகாப்பு திணைக்களம், பேராதெனிய பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கட்டளை வேளாண்மை பிரிவினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.