இலங்கை – ஐ.எம்.எவ் இடையே ஆரம்ப உடன்படிக்கை

0
132

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையில், அவசரகால கடன் வழங்குவதற்கான ஆரம்ப உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விடயம் தொடர்பில் நேரடியாக தொடர்புடைய நான்கு வட்டாரங்கள் இதனை தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடன்படிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது. ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடும் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டொலர்களை வரை கோரியுள்ளது. இந்த நிலையில் கடன் இணக்கம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை என்று ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், திறைசேரியின் செயலாளர் உட்பட இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.