இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுருத்த பொல்கம்பல மற்றும் டெனிசன் பொன்சேகா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பபட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றுக்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக ஒரு கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபரான மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் சுபுன்.எஸ்.பத்திரகே முன்னதாக பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது