ஈரான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த இந்த விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லாங்ரூட் நகரில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.