ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களின் நினைவாக மட்டக்களப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது. தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனம் மற்றும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இரத்தான முகாமினை நடாத்தினார்கள்.
போதனா வைத்தியசாலையின் இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது. ‘குருதிகொண்டு அஞ்சலி செலுத்துவோம்’ என்னும் தலைப்பில் நடாத்தப்பட்ட இரத்ததான முகாமில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் கலாராணி மற்றும் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் நிசாந்தினி அருள்மொழி, மண்முனை வடக்கு இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட சம்மேளன தலைவர், மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளன தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் பங்குகொண்டு இரத்தம் வழங்கியதுடன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதிலில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இரத்தம் வழங்கிய இரத்த கொடையாளர்களுக்கு இதன்போது சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.