27 C
Colombo
Wednesday, October 23, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காதோர் பயன்பாட்டுக் கட்டணங்களை செலுத்த பணிப்பு

முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் இன்னும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்கவில்லை என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை விடுத்துள்ள அமைச்சு, இம்மாதம் 30ஆம் திகதிக்குள் இல்லங்களை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறுவதற்கு முன் தண்ணீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டுக் கட்டணங்களையும் செலுத்துமாறு அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தியோகபூர்வ இல்லங்கள் அனைத்தும் முறையாக செலுத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவை திரும்ப ஏற்றுக்கொள்ளப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles