உத்தேச சொத்து வரி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர் அமுலுக்கு வரும் எனவும், வரி, 90 வீதமான சாதாரண பொது மக்களை பாதிக்காது எனவும், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று, ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.

மிகவும் முற்போக்கான வரி முறைமையான இது, உலகின் பல நாடுகளில் அமுல்படுத்தப்படும் வரியாக இருக்கிறது.என்.எம்.பெரேரா நிதி அமைச்சராக இருந்த போது கூட, இந்த வரி அமுல்படுத்தப்பட்டது.
இந்த வரி அமுல்படுத்தப்பட்ட பின்னர், எதிர்காலத்தில், சாதாரண மக்களிடம் அறவிடப்படும் மறைமுக வரியின் அளவைக் குறைக்க முடியும்.
இதனால், 100 வீதம், மக்கள் இந்த வரியின் பலனை அனுபவிக்க முடியும்.
என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.