உலகக் கிண்ண சதுரங்க போட்டிக்கான வெற்றியாளர் இன்று தீர்மானம்!

0
146
அஸர்பைஜானில் நடைபெற்ற உலகக் கிண்ண சதுரங்க போட்டிக்கான இறுதிச்சுற்றின் வெற்றியாளர் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளார்.இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தாவும் நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சென் ஆகியோருக்கிடையே நேற்று இடம்பெற்ற இறுதிச்சுற்றின் இரண்டாவது ஆட்டமும் சமநிலையில் முடிவடைந்துள்ளது.இந்தநிலையில், வெற்றியாளர் இன்றைய தினம் தீர்மானிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் முதல் சுற்று ஆட்டமும், இரண்டாவது சுற்று ஆட்டமும் சமநிலையில் நிறைவுற்றன.இறுதிச்சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கார்ல்சென் வெள்ளை நிறக் காய்களுடனும், பிரக்ஞானந்தா கருப்புநிற காய்களுடனும் விளையாடினர். அதன்படி, 30 ஆவது நகர்த்தலில் ஆட்டத்தை சமநிலையில் நிறைவுறுத்த இரு வீரர்களும் ஒப்புக் கொண்டனர்.