உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

0
59

நாவுல, அம்பன, எரிஸ்டன் வீதி பகுதியில் நேற்று பிற்பகல் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் கொங்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 55 வயதானவர் என தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று (26) நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.