சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாட, அரசியலமைப்பு பேரவை, எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நிதி ஆணைக்குழு, கொள்முதல் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்குக்கு, உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில், கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.